பொள்ளாச்சி அருகே பரமக்குடியிலிருந்து ஆன்மிக சுற்றுலா வந்த பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

வளைவில் திரும்ப முயன்றபோது பஸ் மோதியதில், டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் பகுதியில் வளைவில் திரும்ப முயன்ற டிராக்டர் மீது 54 பயணிகளுடன் பரமக்குடியில் இருந்து மேல்மருவத்தூர் சென்றுவிட்டு கோவை வழியாக பொள்ளாச்சி மாசாணியம்மன்கோவில் மற்றும் பழனிக்கு வந்த சுற்றுலாப் பேருந்தானது கோயமுத்தூர் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் .

பேருந்தில் பயணித்த 8 பேருக்கு சிறு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டது. விபத்து காரணமாக பொள்ளாச்சி கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்குபதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...