வால்பாறை அருகே தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் - கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்த சோகம்

தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது. விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே 12 வயது சிறுவன் தொட்டில் கட்டிவிளையாடும் போது கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்தார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதியில் சசி குமார், சூர்யா அவர்கள் மகன் ராஜா 12 வயது கருமலை எஸ்டேட் நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்ற சிறுவன் வீட்டின் வாசலில் உள்ள சட்டத்தில் சேலையால் தொட்டில் கட்டி தனது தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது.



மேற்படி சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் மேற்படி சிறுவன் இறந்துள்ளார் என்று தெரிவித்த நிலையில் சிறுவனின் பிரேதம் வால்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...