வால்பாறை அருகே தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் - கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்த சோகம்

தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது. விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே 12 வயது சிறுவன் தொட்டில் கட்டிவிளையாடும் போது கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்தார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதியில் சசி குமார், சூர்யா அவர்கள் மகன் ராஜா 12 வயது கருமலை எஸ்டேட் நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்ற சிறுவன் வீட்டின் வாசலில் உள்ள சட்டத்தில் சேலையால் தொட்டில் கட்டி தனது தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது.



மேற்படி சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் மேற்படி சிறுவன் இறந்துள்ளார் என்று தெரிவித்த நிலையில் சிறுவனின் பிரேதம் வால்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...