கோவை அருகே ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை - ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆம்புலன்ஸில் வரும் வழியில் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சோதிக்கப்பட்ட நிலையில் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயேகுழந்தை பிறந்த நிலையில் ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கோவைநல்லாம்பாளையம் ரோடு, ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிமுருகன்.இவரது மனைவி மம்தா( 29. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்காக, 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மம்தாவை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்தனர். மம்தாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், அவரை ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப ஊழியர் கோபாலகிருஷ்ணன் பரிசோதித்தார்.

குழந்தையின் தலை வெளியில் வந்தது தெரிந்தது.இதனால் வேறு வழியின்றி அவர், பிரசவம் பார்த்தார். இதில் மம்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மம்தாவை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரகாலத்தில் விரைந்து செயல்பட்டஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...