கோவை அருகே ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை - ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆம்புலன்ஸில் வரும் வழியில் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சோதிக்கப்பட்ட நிலையில் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயேகுழந்தை பிறந்த நிலையில் ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கோவைநல்லாம்பாளையம் ரோடு, ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிமுருகன்.இவரது மனைவி மம்தா( 29. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்காக, 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மம்தாவை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்தனர். மம்தாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், அவரை ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப ஊழியர் கோபாலகிருஷ்ணன் பரிசோதித்தார்.

குழந்தையின் தலை வெளியில் வந்தது தெரிந்தது.இதனால் வேறு வழியின்றி அவர், பிரசவம் பார்த்தார். இதில் மம்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மம்தாவை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரகாலத்தில் விரைந்து செயல்பட்டஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...