உடுமலை அருகே ஊராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா - ஏராளமானோர் பங்கேற்பு

குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், எதிர்கால இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு தகுதியுள்ளவர்கள் இன்றைய குழந்தைகள் என்பதை மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நமது இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளானது குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்து பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி குழந்தைகள் தினமான இன்று குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கோவை பல் தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், அதோடு மட்டுமல்லாமல் எதிர்கால இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு தகுதியுள்ளவர்கள் இன்றைய குழந்தைகள் என்பதை மாணவர்களிடம் தெரிவித்தார்.

இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற குழந்தைகளாகிய நீங்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு சாதனையாளர்களாக நீங்கள் வரவேண்டும் என்று கூறி குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த மாதம் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து நன்றி கூறினார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...