உடுமலை அருகே ஊராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா - ஏராளமானோர் பங்கேற்பு

குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், எதிர்கால இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு தகுதியுள்ளவர்கள் இன்றைய குழந்தைகள் என்பதை மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நமது இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளானது குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்து பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி குழந்தைகள் தினமான இன்று குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கோவை பல் தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், அதோடு மட்டுமல்லாமல் எதிர்கால இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு தகுதியுள்ளவர்கள் இன்றைய குழந்தைகள் என்பதை மாணவர்களிடம் தெரிவித்தார்.

இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற குழந்தைகளாகிய நீங்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு சாதனையாளர்களாக நீங்கள் வரவேண்டும் என்று கூறி குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த மாதம் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து நன்றி கூறினார்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...