தீபாவளியையொட்டி ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் - உடுமலையில் வாகன உரிமையாளர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தீபாவளியை முன்னிட்டு போர்வை மற்றும் தலகாணி இனிப்புகள் வழங்கப்பட்டன. முதியோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு ஓட்டுநர் நல சங்கம் சார்பாக தீபாவளியையொட்டிநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய உழைப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் ஆக்டிங் டிரைவர்சஸ் மற்றும் நகர சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பங்களிப்போடு தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் போர்வை மற்றும் தலகாணி தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



அகில இந்திய உழைப்பாளர்கள் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் சுரேஷ்குமார் மாநிலத் தலைவர் தாமோதரன் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தல் படி மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உடுமலை நகரத் தலைவர் முருகவேல் உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன் உடுமலை நகர பொருளாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...