கோவையில் தேங்கிய மழைநீர் - உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

வடக்கு கிழக்கு பருவ மழை தீவிரமான நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மழைநீர் வடிகால் வடிகால் நிரம்பி குப்பைகளோடு தண்ணீர் வடிந்தோடிய நிலையில் மேயர் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களைமேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13க்குட்பட்ட மாணிக்கவாசகர் நகரில் மாண்புமிகு மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு வீடுகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட சங்கனூர் கால்வாய் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரி, அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட கல்பனா லே-அவுட் பகுதியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, இரவு பெய்த மழையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார்நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...