நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்ட கழிவுகளா என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கோவை அவிநாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டின் மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுக் கிடந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்ட கழிவுகளா என்ற புதிய கோணத்தில் சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.



கோவையின் எல்லைப் பகுதிகளான வாளையார், ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வழியே கேரள மாநிலத்தில் இருந்து பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் நள்ளிரவு நேரத்தில் லாரிகளில் கடத்தி வரப்பட்டு, தமிழக எல்லை மற்றும் கோவை புறநகர்ப் பகுதிகளில் உள்ள புதர்களில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.




தற்போது நீலாம்பூர் பகுதியிலும் நூற்றுக்கணக்கான மாட்டின் மண்டை ஓடுகள் லாரி கணக்கில் கொட்டப்பட்டு இருப்பதால், இதுவும் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு நள்ளிரவில் வீசிச் செல்லப்பட்ட கழிவுகளாக இருக்கலாம் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பலமான சந்தேகத்தை எழுப்புகின்றனர்.


சின்னியம்பாளையம்-நீலாம்பூர் சாலையோரப் புதரில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற நபர் ஒருவர், துர்நாற்றம் வீசியதைக் கண்டு பார்த்தபோது குவியல் குவியலாக மாட்டின் மண்டை ஓடுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அதைச் செல்போனில் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட, அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.


இக்கழிவுகளால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாகித் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகமும் காவல் துறையும் உடனடியாக அப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எல்லைச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, கேரளாவில் இருந்தோ அல்லது உள்ளூர் கசாப்புக் கடைகளில் இருந்தோ கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டிய மர்ம நபர்கள் மீது கடினமான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...