கோவையில் தேங்கிய மழைநீர் - உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

வடக்கு கிழக்கு பருவ மழை தீவிரமான நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மழைநீர் வடிகால் வடிகால் நிரம்பி குப்பைகளோடு தண்ணீர் வடிந்தோடிய நிலையில் மேயர் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களைமேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13க்குட்பட்ட மாணிக்கவாசகர் நகரில் மாண்புமிகு மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு வீடுகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட சங்கனூர் கால்வாய் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரி, அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட கல்பனா லே-அவுட் பகுதியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, இரவு பெய்த மழையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார்நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...