அனுமதியை பெறாமல் தோண்டப்பட்டுள்ள குழிகள் - நிலத்திற்கு சொந்தமான மூதாட்டி துடியலூர் காவல்நிலையத்தில் புகார்

பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் எந்த இழப்பீடும் வழங்காமலும், முன் அறிவிப்பு இல்லாமலும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக தனது நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதாக சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சியில், சி ஆர் பி எப் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திடிரென குழிகள் தோண்டப்பட்டுள்ளது.



இந்த நிலத்தில் ஆர்ஜிதம் செய்வதற்கு சாவித்திரி அம்மாளுக்கு இதுவரை முதற்கட்ட நோட்டீஸ் கூட வழங்கப்படவில்லை என்றும் மேலும் இவருக்கு இழப்பீடு தொகையோ, அல்லது இழப்பீடு கொடுத்து விடுவோம் என்ற எந்த அத்தாட்சியும் இல்லாமல் இவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நிலத்தில் இருந்த கம்பி வேலிகளை உடைத்து ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் குழிகள் தோண்டியுள்ளனர்.

இதற்கு செயற்பொறியாளர் செந்தில் குமார் என்பவர் தான் காரணம் என்றும் அவர் மீதும் பில்லூர் ஒப்பந்ததாரர்கள் மெகா இன்ஜினியரிங் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்தின் மீதும் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில் எங்களுக்கு உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு அவர்கள் பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இது குறித்து செயற்பொறியாளர் செந்தில்குமாரிடம் பேசும்போது டிசம்பர் மாதத்திற்குள் முதலமைச்சர் மூலம் அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப் பட உள்ளதால் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளின் உத்தரவின்படி அவர்களது நிலத்தில் குழி தோண்டியதாக தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...