அனுமதியை பெறாமல் தோண்டப்பட்டுள்ள குழிகள் - நிலத்திற்கு சொந்தமான மூதாட்டி துடியலூர் காவல்நிலையத்தில் புகார்

பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் எந்த இழப்பீடும் வழங்காமலும், முன் அறிவிப்பு இல்லாமலும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக தனது நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதாக சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சியில், சி ஆர் பி எப் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திடிரென குழிகள் தோண்டப்பட்டுள்ளது.



இந்த நிலத்தில் ஆர்ஜிதம் செய்வதற்கு சாவித்திரி அம்மாளுக்கு இதுவரை முதற்கட்ட நோட்டீஸ் கூட வழங்கப்படவில்லை என்றும் மேலும் இவருக்கு இழப்பீடு தொகையோ, அல்லது இழப்பீடு கொடுத்து விடுவோம் என்ற எந்த அத்தாட்சியும் இல்லாமல் இவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நிலத்தில் இருந்த கம்பி வேலிகளை உடைத்து ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் குழிகள் தோண்டியுள்ளனர்.

இதற்கு செயற்பொறியாளர் செந்தில் குமார் என்பவர் தான் காரணம் என்றும் அவர் மீதும் பில்லூர் ஒப்பந்ததாரர்கள் மெகா இன்ஜினியரிங் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்தின் மீதும் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில் எங்களுக்கு உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு அவர்கள் பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இது குறித்து செயற்பொறியாளர் செந்தில்குமாரிடம் பேசும்போது டிசம்பர் மாதத்திற்குள் முதலமைச்சர் மூலம் அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப் பட உள்ளதால் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளின் உத்தரவின்படி அவர்களது நிலத்தில் குழி தோண்டியதாக தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...