குறிச்சி அரவான் திருவிழா நடத்துவதற்கு தடை - உரிய நடவடிக்கை கோரி ஒருங்கிணைப்புக்குழு மனு

கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் அரவான் திருவிழாவிற்கு தடையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஒருங்கிணைப்புக்குழு மனு அளித்துள்ளது.


கோவை: குறிச்சி அரவான்திருவிழா நடத்திட நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுதோறும்அரவான் திருவிழா நடைபெற்று வருகிறது. பல வருடங்களாக 16 சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்த அரவான் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இந்தத் திருவிழாவை நடத்த வேண்டிய நிர்வாகிகளில் ஒரு சிலர் தடையாக இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்திட வேண்டியும் குறிச்சி அரவான் ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்த அவர்கள் அளித்துள்ள மனுவில், இந்த திருவிழா நடத்துவதற்கு கூட்டத்தை அறிவிக்க வேண்டிய ஊர் கவுண்டர் பத்மகுமார் அவர் சொல்லும் படியாக மற்ற சமூகத்தினர்கேட்டால் மட்டுமே தேதியை அறிவிப்பேன் எனக் கூறுவதாகவும் கணக்குப் பிழையான மரகதம் பிள்ளை தனது வீட்டிற்கு வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன் என்கிறார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் தேவர் சமூகத்தில் மூன்று பேர் நாங்கள் தான் தேவர் சமூகப் பிரதிநிதி(முக்கந்தர்) என்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்த நபர்களால் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் திருவிழா நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் இவர்கள் தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.



எனவே திருவிழாவிற்கு தடையாக உள்ள இவர்களை முறையாக விசாரித்து திருவிழா நடத்திட நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...