கோவையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடை - மாமன்ற உறுப்பினர் தலைமையில் சாலைமறியல்

அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று கடை அகற்றப்படும் என காவல்துறை அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் பகுதியில் புதிதாக மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோவை P.N.புதூர் பகுதியில் புதிதாக திறந்த மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 41-வது மாமன்ற உறுப்பினர் K.சாந்தி சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



கடந்த வருடமே மருதமலை மெயின் ரோடு P.N.புதூர் மயானத்தின் பின்புறம் மதுபானக்கடை வருவதை அறிந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினரை அணுகியதால் போராட்டம் நடைபெறும் நேரத்தில் காவல்துறை முன்னிலையில் இட உரிமையாளர் கடை வராது என உறுதிமொழி கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.



ஆனால் இந்த வருடம் (2023) ஆகஸ்ட் மாதம் மீண்டும் கடை திறக்கும் வேலைகள் நடைபெறும் பொழுதில் இருந்து தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்டு அனைத்து அதிகாரிகளையும் தொடர்ச்சியாக நேரில் சந்தித்து புகார் மனுவாக கொடுத்தும், அதிகாரிகளும் கடை வராமல் பார்த்துக் கொள்கிறோம் என கூறிய நிலையில் இன்று மதியம் திடிரென காவல்துறையை குவித்து கடையை திறந்து விட்டதை அறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர், டாஸ்மார்க் அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து, அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று தங்களது குறைகளை தீர்த்து வைப்பதாக உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Newsletter

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...