நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் அபார வெற்றி பெறும் - சுதாகர் ரெட்டி பேட்டி

தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு அவர்களின் கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்றும், மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மாநில அளவிலான பயிற்சி முகாம், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்றது.



முகாமில் தமிழ்நாடு இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளிடம் பேசும் பொழுது, வரும் மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆகவும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் பல நல்ல திட்டங்களை தொடர்ந்து கொண்டு வருகிறது.

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என பேசினார்.



மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம், மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் உட்பட மாநில மண்டல மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...