நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் அபார வெற்றி பெறும் - சுதாகர் ரெட்டி பேட்டி

தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு அவர்களின் கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்றும், மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மாநில அளவிலான பயிற்சி முகாம், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்றது.



முகாமில் தமிழ்நாடு இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளிடம் பேசும் பொழுது, வரும் மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு கல்லூரி மற்றும் இல்லத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. மத்திய அரசு கொண்டு வந்த ஏராளமான நிதிகளை திமுக அரசு அதை மறைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆகவும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் பல நல்ல திட்டங்களை தொடர்ந்து கொண்டு வருகிறது.

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என பேசினார்.



மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம், மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் உட்பட மாநில மண்டல மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...