கோவையில் உள்ள மழைநீர் வடிகால்கள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.95க்குட்பட்ட போத்தனூர் பிரதான சாலையினை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் பாலம் அமைத்து, சாலையை சரிசெய்யவும், மழைநீர் வடிகால் தூர்வாரிடவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம், மதுக்கரை பிரதான சாலையில் உள்ள சிறுபாலத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வார உரிய திட்டமதிப்பீடு தயாரித்திடவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட பின்பு,



பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் உள்ள பதிவேடுகள், உணவு பொருட்களின் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.92க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை, கோவைப்புதூர் பிரிவு ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு, அப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்,



குனியமுத்தூர், செங்குளம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், அஸ்லாம் பாஷா, அப்துல் காதர், இளஞ்சேகரன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பசும்பொன். மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சபரிராஜ். சதீஸ்குமார், சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...