கோவையில் உள்ள மழைநீர் வடிகால்கள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.95க்குட்பட்ட போத்தனூர் பிரதான சாலையினை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் பாலம் அமைத்து, சாலையை சரிசெய்யவும், மழைநீர் வடிகால் தூர்வாரிடவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம், மதுக்கரை பிரதான சாலையில் உள்ள சிறுபாலத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வார உரிய திட்டமதிப்பீடு தயாரித்திடவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட பின்பு,



பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் உள்ள பதிவேடுகள், உணவு பொருட்களின் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.92க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை, கோவைப்புதூர் பிரிவு ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு, அப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்,



குனியமுத்தூர், செங்குளம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், அஸ்லாம் பாஷா, அப்துல் காதர், இளஞ்சேகரன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பசும்பொன். மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சபரிராஜ். சதீஸ்குமார், சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...