ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்லடத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம்" என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி நால்ரோடு வழியாக மங்கலம் சாலை வழியாக அரசு பள்ளி வரை நடைபெற்றது.



இந்நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்ற கோஷத்தோடு பேரணியாக சென்றனர்.



இந்நிகழ்வில் பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சசிலேகா, போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...