கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நாளை துவக்கம்

ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசி இரண்டு ஆண்டுகளாக இந்த மாநாடு நாக்பூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு இம்மாநாடு கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.



மேலும், இந்த பிரதிநிதிகள் குழு சந்திப்பின் போது, பொதுச்சௌலாளர் உள்ளிட்டவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். கடந்த மூன்று ஆண்டுகளும் இக்கூட்டத்திலேயே இப்பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை எட்டிமடை அமிர்த விஸ்வ வித்யாலயத்தில் நாளை துவங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 1500 மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் உள்ள 11 மண்டலங்கள் மற்றும் 42 மாகாணங்களில் தமிழ்நாடு வடக்கு மற்றும் தெற்கு தமிழ்நாடு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் இருந்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிகழ்வின் போது பல்வேறு துறைகளின் கீழ் பணியாற்றி வரும் இவ்வமைப்பினர் தங்களது அனபவங்கள் குறித்தும், அடுத்தகட்ட இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும். இதில் நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், அழிந்துவரும் மற்றும் பற்றாக்குறையான இந்திய பாரம்பரிய காளையினங்களை மேம்படுத்துதள் குறித்த கட்டுரை தொகுப்புகளும், விளங்கங்களும் இம்மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது. 

இம்மாநாட்டினை தற்போதைய தலைவர் மோகன் மதுக்கர் பகவத் பங்கேற்று மாநாட்டினை துவக்கிவைப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. 

மேலும், இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேவையாற்றி வரும் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...