கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நாளை துவக்கம்

ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசி இரண்டு ஆண்டுகளாக இந்த மாநாடு நாக்பூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு இம்மாநாடு கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.



மேலும், இந்த பிரதிநிதிகள் குழு சந்திப்பின் போது, பொதுச்சௌலாளர் உள்ளிட்டவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். கடந்த மூன்று ஆண்டுகளும் இக்கூட்டத்திலேயே இப்பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை எட்டிமடை அமிர்த விஸ்வ வித்யாலயத்தில் நாளை துவங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 1500 மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் உள்ள 11 மண்டலங்கள் மற்றும் 42 மாகாணங்களில் தமிழ்நாடு வடக்கு மற்றும் தெற்கு தமிழ்நாடு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் இருந்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிகழ்வின் போது பல்வேறு துறைகளின் கீழ் பணியாற்றி வரும் இவ்வமைப்பினர் தங்களது அனபவங்கள் குறித்தும், அடுத்தகட்ட இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும். இதில் நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், அழிந்துவரும் மற்றும் பற்றாக்குறையான இந்திய பாரம்பரிய காளையினங்களை மேம்படுத்துதள் குறித்த கட்டுரை தொகுப்புகளும், விளங்கங்களும் இம்மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது. 

இம்மாநாட்டினை தற்போதைய தலைவர் மோகன் மதுக்கர் பகவத் பங்கேற்று மாநாட்டினை துவக்கிவைப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. 

மேலும், இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேவையாற்றி வரும் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...