தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பட்டயப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 06.11.2023 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூரில் உள்ள அண்ணா அரங்கத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பட்டயப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 06.11.2023 அன்று நடைபெற உள்ளது.

உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission) நடைபெறும் விதம்: நேரடி கலந்தாய்வு உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்குரிய குறிப்பிட்ட தேதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூரில் உள்ள அண்ணா அரங்கத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கையில் (Spot Admission) கலந்து கொள்ள நிபந்தனைகள்: உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்களிடமிருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும் மற்றும் உடனடி மாணவர் சேர்க்கைக்கு நகர்வு முறை (Sliding System) கிடையாது.

உடனடி மாணவர் சேர்க்கையில் எவரெல்லாம் கலந்து கொள்ளலாம்? பட்டயப்படிப்பிற்கான கலந்தாய்வில் ஏற்கனவே கலந்து கொள்ளதாவர்கள். கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பினை தவற விட்டவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு கல்லூரியில் சேராதவர்கள் கலந்து கொள்ளலாம். உடனடி மாணவர் சேர்க்கையில் எவரெல்லாம் கலந்து கொள்ள கூடாது? மாணவர் சேர்க்கை பெற்று இடைநிறுத்தம் செய்து கொண்டவர்கள்கலந்து கொள்ளகூடாது.

உடனடி மாணவர் சேர்க்கைக்குரிய கட்டணம்: பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் (Spot Admission) கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணம் செலுத்த தேவையில்லை கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் SC/SCA/ST பிரிவு ரூபாய். 100/- மற்றும் இதர பிரிவினர் ரூபாய். 200/செலுத்த வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்று பின்பற்ற வேண்டியவை.

உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வளாகத்திற்கு வர வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கையின் போது இணைப்புக் கல்லூரிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடக் கட்டணம் குறித்த விவரங்களை, மாணவர்கள் இணைப்புக் கல்லூரிகளிடம் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கான தொலைபேசி எண்கள் தகவல் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. (பக்கஎண். 5 to 7 தகவல் கையேடு 2023 (Diploma Information Brochure 2023), இணையதள முகவரிhttp://tnagfi.ucanapply.com). உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்ட மாணவர்களின் வருகைப் பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

உடனடி மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களுக்கு கல்லூரி காலியிடம் திரையில் தெரிவிக்கப்படும். தரவரிசையின் மற்றும் சாதிய அடிப்படையில், மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டயப்படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம், உடனடி மாணவர் சேர்க்கையின் போது இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட சேர்க்கை கட்டணமான ரூபாய்.5,000/- தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம்.

பணம் கட்டுவதற்கான வசதி பல்கலைக்கழக வளாகத்திலேயே செய்யப்பட்டு இருக்கும். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது. உடனடி மாணவர் சேர்க்கைக்கான(Spot Admission) காலியிடங்களுக்குரிய அட்டவணை 05/11.2023 அன்று http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் உடனடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் 9488635077, 9486425076 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...