டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஓன்றியம் வாகத் தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட வி. வேலூர் பகுதியில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது.



அந்த கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூங்கில் தொழவு, வி.வேலூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை நெகமம் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கடையை சுற்றிலும் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதால் வன்கொடுமைகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கடை அமைவதால் பெண்கள், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை டி எஸ் பி சுகுமாரன் மற்றும் வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கடை இடமாற்றம் செய்யபடும் என உறுதி அளிக்கபட்டதால் தற்காலிமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் அரசு மதுபான கடை திறந்தால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் மீண்டும் நடத்தப்படும் என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை நெகமம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கபட்டது.

Newsletter

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...