கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

கோவையில் காலை முதல் பல்வேறு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.


கோவை: கோவை ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், பூ மார்க்கெட், வடகோவை, சாய்பாபாகாலனி, வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.



வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்த நிலையில், நீலகிரிக்கு அருகில் உள்ள கோவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில் இன்று காலை முதல் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.



கோவை ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், பூ மார்க்கெட், வடகோவை, சாய்பாபாகாலனி, வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் ஓரிரு புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக சாலையில் செல்வோர், மற்றும் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும் கோவை மாநகரில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...