கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

கோவையில் காலை முதல் பல்வேறு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.


கோவை: கோவை ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், பூ மார்க்கெட், வடகோவை, சாய்பாபாகாலனி, வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.



வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்த நிலையில், நீலகிரிக்கு அருகில் உள்ள கோவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில் இன்று காலை முதல் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.



கோவை ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், பூ மார்க்கெட், வடகோவை, சாய்பாபாகாலனி, வெங்கடாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் ஓரிரு புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக சாலையில் செல்வோர், மற்றும் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும் கோவை மாநகரில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...