கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை - சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ்

கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு சென்று விடுவேன் என அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சூலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக கட்சியை சேர்ந்த கனகராஜ் இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சூலூர் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியில் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த கல்குவாரியில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கனகராஜ் நேற்று மாலை ஆய்வு செய்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜ், கல்குவாரியில் அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு முறையாக ஆய்வு நடத்தவில்லை என குற்றம்சாட்டினார். இந்த கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழக்க வேண்டியிருக்கும் என கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள நான் வேறு அணிக்கு சென்றுவிடுவேன் அல்லது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் எனவும் தெரிவித்தார். 

மேலும் இருவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில் எதற்கு எனக்கு பதவி என கேள்வி எழுப்பிய அவர், வேறு அணிக்கு சென்றலாலும் சென்றுவிடுவேன் எனவும், எதை பற்றியும் எனக்கு கவலையில்லை எனவும் கனகராஜ் தெரிவித்தார். ஏற்கனவே 135 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்ட நிலையில், மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பகிரங்கமாக வேறு அணிக்கு சென்றுவிடுவேன் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...