துடியலூர் அருகே கோவிலுக்கு வந்த அமைச்சர் முத்துசாமியிடம் தூய்மைப்பணியாளர்கள் திடீர் கோரிக்கை

கோவை துடியலூரை அடுத்த பன்னீமடையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வீடுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஊதியம் உயர்த்தி வழங்கக் கோரியும், வீட்டுமனைப் பட்டா வேண்டும் எனவும் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.


கோவை: ஊதிய உயர்வு மற்றும் வீட்டுமனைப்பட்டா கேட்ட தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர்மடை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி, ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சியாக நேற்று நடைபெற்றது.



இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வந்தார்.



அப்போது கோயில் வாசலில் காத்திருந்த பன்னீர்மடை ஊராட்சியில் வேலை செய்யும் 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அமைச்சர் முத்துசாமியிடம், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதவில்லை என்றும், அதிகரித்து தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மேலும் குடியிருப்பதற்காக வீட்டுமனை பட்ட வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதனை கேட்ட அமைச்சர், உடனடியாக ஊராட்சித்தலைவர் பி.எஸ்.எம் ரத்தினம் மருதாசலத்தை அழைத்து வீட்டு மனைப் பட்டா வழங்க அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்து விசாரித்தார். தொடர்ந்து வீட்டுமனை குறித்து பரிசிலினை செய்து உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பரிசிலினை செய்யப்பட்டு வருவதாகவும், தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.



முன்னதாக அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி, ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த அமைச்சர் முத்துசாமிக்கு கோவில் கமிட்டியினர் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.



அதன்பிறகு சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியின்போது, கோயில் கமிட்டியினர், திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...