உடுமலை நகராட்சி 4-வது வார்டில் உள்ள பொது கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழப்பு

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


திருப்பூர்: பொதுக்கிணற்றில் மீன்கள் உயிரிழந்துள்ளது பற்றி சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு யூ.எஸ்.எஸ்.காலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள பொதுக் கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வரும் நிலையில் இன்று கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகின்றது.

பின்னர் கிணற்றை பார்த்த பொழுது 100க்கும் மேற்பட்ட மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மிதப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் கிணற்றில் ஏதேனும் கலக்கப்பட்டதா எனவும் மீன்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

மாசடைந்த கிணற்று நீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொதுக் கிணற்றில் மர்மமான முறையில் மீன்கள் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...