உடுமலையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

உடுமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்தவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிவசக்தி காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த தகவலையடுத்து, தலைமை காவலர் பத்ரா அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த சிவலிங்கம் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ அளவில் கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவருக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கு உறுதியாக இருந்த ஏரி பாளையத்தைச் சேர்ந்த தியாகு என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...