கோவை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீதுவபோக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளாராக (SSI) பணியாற்றி வருபவர் துரைராஜ்(55). இவர் ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு 19 மற்றும் 17 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் பலமுறை அந்த பெண் வீட்டில் இல்லாத போது துரைராஜ் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இந்நிலையில் நான்கு தினங்களுக்கு முன் அச்சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதனால் அப்பெண் சிறுமிகளை காணவில்லை என புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போலிசார் அச்சிறுமிகள் இருந்த இடத்தை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் துரைராஜ் செய்த பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து துரைராஜ் மீது போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்கு செய்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...