கோவை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீதுவபோக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளாராக (SSI) பணியாற்றி வருபவர் துரைராஜ்(55). இவர் ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு 19 மற்றும் 17 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் பலமுறை அந்த பெண் வீட்டில் இல்லாத போது துரைராஜ் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இந்நிலையில் நான்கு தினங்களுக்கு முன் அச்சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதனால் அப்பெண் சிறுமிகளை காணவில்லை என புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போலிசார் அச்சிறுமிகள் இருந்த இடத்தை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் துரைராஜ் செய்த பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து துரைராஜ் மீது போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்கு செய்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...