கோவையில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2 - கோவை உட்பட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற “தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2” ல் சென்னை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு கவனத்தை ஈர்த்தனர்.


கோவை: தமிழ்நாடு சைக்கிள் லீக் சீசன் 2” சைக்கிள் பந்தயத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை கொண்ட 8 அணிகள் கலந்து கொண்டன.



“தமிழ்நாடு சைக்கிள் லீக் சீசன் 2” சைக்கிள் பந்தயம் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ‘கரி மோட்டார் வே’ வில் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை கொண்ட 8 அணிகள் கலந்து கொண்டனர்.



மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் முதல், இரண்டு, மூன்று என வரும் அணிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது.



புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவார்கள். சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த “தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2” இறுதி போட்டிகள் நளை நடைபெற உள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...