ஆயுத பூஜையை முன்னிட்டு உடுமலையில் பொரி உற்பத்தி தீவிரம் - தமிழக அரசு மானியம் வழங்க கோரிக்கை

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நெருங்குவதால் உடுமலை பகுதிகளில் பொரி உற்பத்தி கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


திருப்பூர்: நலிவு அடைந்து வரும் பொரி தொழிலை மேம்படுத்தவும்,இதனை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அடையயவும், தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நெருங்குவதால் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள ஏரிப்பாளையம், கொமரலிங்கம், கொழுமம், பாப்பன்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் பொரி உற்பத்தி கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பொரி தயாரிக்க பயன்படும் அரிசி, கல்கத்தா மற்றும் கர்நாடகவில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ அரசி கிலோ 25 ரூபாய் க்கு விற்று வந்த நிலையில் தற்போது கொள்முதல் விலை, மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ரூ.35 ரூபாய் விற்பனை ஆகி வருகிறது. இதற்கிடையில் இந்த அரிசியை நீரில் ஊற வைத்து, சூரிய ஒளியில், உலர வைத்து, சிறு குவியல்களாக குவித்து வைக்கப்படுகிறது. பின்பு அதில் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா மற்றும் ஆற்று மணல் ஆகியவை தேவைக்கு தகுந்த அளவில் சேர்த்து, சில மணி நேர பக்குவம் செய்யப்படுகிறது. பின்பு, இந்த அரிசியை பொரி உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் (பொரிஅடுப்பு) கொட்டி, இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வேக வைக்கும் பொழுது, சுவைமிகுந்த பொரி உற்பத்தியாகிறது. இதை மூட்டைகளில் சேகரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

பொரி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:பொரியை படி மற்றும் பக்கா அளவில் கொடுக்கிறோம். 110லிட்டர் கொண்ட ஒரு மூட்டை தற்போது மூலப்பொருள் விலை உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூபாய் 500 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகின்றது. இருப்பினும் பொரி உற்பத்திக்கு மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கூலியும் உயர்ந்து இருப்பதால் பொரி உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறைந்த அளவு கிடைக்கிறது. மேலும் உடுமலை நகராட்சி ஏரிப்பாளையம் பகுதியில் மட்டும் சுமார் 60 க்கும் குடும்பங்களுக்கு மேல் பொரி உற்பத்தி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் இத் தொழில் நலிவடைந்து தற்போது திருப்பூர், கோவை பனியன் கம்பெனி உட்பட பல்வேறு மாற்று தொழிலுக்கு சென்று விட்டார்கள்.

ஆகையால் நலிவு அடைந்து வரும் இத்தொழிலை மேம்படுத்தவும் பொரி உற்பத்தி நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அடைய தமிழக அரசு இந்த இயந்திரங்கள் வாங்க கடன் உதவியும் மற்றும் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் மற்றும் மேலும் குடிசைத் தொழிலாக செய்து வந்தாலும் வழக்கமான தொழில்களுக்கான மின் கட்டணமே செலுத்தும் நிலை உள்ளது எனவே பாரம்பரிய தொழிலை காப்பாற்றும் வகையில் மின் கட்டணத்தில் சலுகை மற்றும் ஆணியும் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...