லியோ படத்தை காண உற்சாகத்துடன் வந்த மாற்றுத்திறனாளி - விஜயை நேரில் பார்க்க வேண்டும் என ஆசை

கோவை சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்ட லியோ திரைப்படத்தை பார்க்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், விஜய்யை நேரில் பார்க்க ஆசையாக இருப்பதாக தெரிவித்தார்.


கோவை: தொலைக்காட்சி வாயிலாக நடிர் விஜய் பார்த்தால் கண்டிப்பாக தன்னை நேரில் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதென மருதாச்சலம் என்ற மாற்றுத்திறனாளி தெரிவித்தனர்.

விஜய் நடிப்பில் இன்று லியோ திரைப்படம் ஐந்து மொழிகளில் உலகம் எங்கும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 9 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டது. அடுத்த காட்சி 12:30 மணியளவில் கோவை சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை காண்பதற்கும் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து லியோ லியோ என உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இக்காட்சியை காண்பதற்கு அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மருதாச்சலம் என்ற மாற்றுத்திறனாளி ரசிகர் மிகவும் உற்சாகத்துடன் திரையரங்கிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்தில் வந்திருந்தார்.

அப்போது அவரும் அவருடன் வந்த நண்பரும் கூறுகையில், லியோ திரைப்படத்தின் முதல் அப்பேட் வந்ததிலிருந்து சுமார் ஒரு வருட காலமாகவே இப்படத்தை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்ததாக தெரிவித்தனர்.



மேலும் மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கு டிக்கெட் இலவசமாகவே வழங்கப்பட்டதாக தெரிவித்தார். விஜயை நேரில் காண வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர்கள் தங்களை தொலைக்காட்சி வாயிலாக விஜய் பார்த்தால் கண்டிப்பாக தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதென தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...