வால்பாறையில் கனமழை - சோலையார் நீர்மட்டம் ஓரே நாளில் 3 அடி உயர்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 3 அடி உயர்ந்துள்ளது.


கோவை: வால்பாறை பகுதிகளில் கடந்த தினங்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 98.28 அடியாக உயர்ந்தது. ஓரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு, 1,269 கனஅடி நீர்வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 410 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

மழை நிலவரம்: அளவு(மி.மீ.,)சோலையாறு - 31, பரம்பிக்குளம் - 20, ஆழியாறு - 49, வால்பாறை - 78, மேல்நீராறு - 106, கீழ்நீராறு - 88, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 22, சர்க்கார்பதி - 21. வேட்டைக்காரன்புதுார் - 27, மணக்கடவு - 7, துாணக்கடவு - 16, பெருவாரிப்பள்ளம் - 18, நவமலை - 23, பொள்ளாச்சி - 58 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...