தாராபுரம் அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா - மாணவர்கள் ஆர்வம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


 திருப்பூர்: மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் பேராசிரியர் ரா. சிவசாமி வரவேற்று பேசினார்.



முத்தூர் கருப்பணன் மாரியப்பபன் கல்லூரியின் ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் அ.அமிர்தலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மொழி-வாழ்க்கை இயக்கியார் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

முன்னதாக இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி மா.தனலட்சுமி ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இரண்டாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவிகள் செ.அஸ்வினி, ரா.தீபிகா ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.

இறுதியாக முதலாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி மகமுதா இர்பானா நன்றி கூறினார்.

ஆங்கிலத் துறை கெளரவ விரிவுரையாளர்கள் ர.ஹர்ஷ் தபே, கார்த்திகேயன், போ.சுதாகர் மற்றும் ம.சந்தியா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...