தாராபுரம் அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா - மாணவர்கள் ஆர்வம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


 திருப்பூர்: மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் பேராசிரியர் ரா. சிவசாமி வரவேற்று பேசினார்.



முத்தூர் கருப்பணன் மாரியப்பபன் கல்லூரியின் ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் அ.அமிர்தலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மொழி-வாழ்க்கை இயக்கியார் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

முன்னதாக இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி மா.தனலட்சுமி ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இரண்டாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவிகள் செ.அஸ்வினி, ரா.தீபிகா ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.

இறுதியாக முதலாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி மகமுதா இர்பானா நன்றி கூறினார்.

ஆங்கிலத் துறை கெளரவ விரிவுரையாளர்கள் ர.ஹர்ஷ் தபே, கார்த்திகேயன், போ.சுதாகர் மற்றும் ம.சந்தியா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...