தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிர்ப்பு - பல்லடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு

தேங்காய் கரித்தொட்டி ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதி ரத்து செய்யக்கோரி இன்று பல்லடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதனிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: தேங்காய் கரித்தொட்டி ஆலையால், விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளதால் குடிநீரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட தேங்காய் தொட்டி சுடும் ஆலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இயங்கி வந்தது. எந்தவித அனுமதியும் இன்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், நிலத்தடி நீர் பாதிப்பு அடைவதாகவும், கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும், கூறி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திய நிலையில் இந்த கறி தொட்டி ஆலையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றினர்.



இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் தேங்காய் கரி தொட்டி ஆலை அமைப்பதற்கான பணிகள் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலேயே நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து அந்த ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதி ரத்து செய்யக்கோரி இன்று பல்லடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதனிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.



15 வருடங்களாக சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆலைக்கு மீண்டும் அனுமதி அளித்து இருப்பதால் இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளதால் குடிநீரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து புகார் மனுவை அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...