இ-பைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறை கீழமை நீதிமன்றங்களில் நடைமுறை படுத்துவதை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பொதுமக்களுக்கும் தங்களுக்கும் கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் இ-பைலிங் முறையை கைவிட்டு பழைய நடைமுறையை கொண்டு வர வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது, இ பைலிங் நடை முறைக்கு குறித்து நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளாத நிலையில், இ-பைலிங் முறை அமல் படுத்தபட்டு இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அடிக்கடி சர்வர் பிரச்சனை ஏற்படுவதால் இ பைலிங் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும், வழக்கமான நடைமுறையுடன். இ-பைலிங் முறையும் அமல்படுத்த வேண்டும் என்றும், இ-பைலிங் முறையில் இருக்கும் சிக்கல்கள் சரி செய்த பின் அதை முழுமையாக அமல்படுத்தலாம் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே நீதிமன்றங்களில் போதிய ஆட்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் நிலையில் இது கூடுதல் சுமைகளை ஏற்படுத்துவதாகவும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் இது இருப்பதால் இ-பைலிங் முறையுடன், பழைய நடைமுறையினையும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...