இ-பைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறை கீழமை நீதிமன்றங்களில் நடைமுறை படுத்துவதை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பொதுமக்களுக்கும் தங்களுக்கும் கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் இ-பைலிங் முறையை கைவிட்டு பழைய நடைமுறையை கொண்டு வர வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது, இ பைலிங் நடை முறைக்கு குறித்து நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளாத நிலையில், இ-பைலிங் முறை அமல் படுத்தபட்டு இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அடிக்கடி சர்வர் பிரச்சனை ஏற்படுவதால் இ பைலிங் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும், வழக்கமான நடைமுறையுடன். இ-பைலிங் முறையும் அமல்படுத்த வேண்டும் என்றும், இ-பைலிங் முறையில் இருக்கும் சிக்கல்கள் சரி செய்த பின் அதை முழுமையாக அமல்படுத்தலாம் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே நீதிமன்றங்களில் போதிய ஆட்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் நிலையில் இது கூடுதல் சுமைகளை ஏற்படுத்துவதாகவும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் இது இருப்பதால் இ-பைலிங் முறையுடன், பழைய நடைமுறையினையும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...