எம்எல்எம் தொழிலுக்கு தனி சட்டம் தேவை - ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேஷன் கோவையில் கோரிக்கை

ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேஷன் சார்பில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அசோசியேசன் தலைவர் மனோகரன், மற்ற மாநிலங்களை போல் எம்எல்எம் தொழிலுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றார்.


கோவை: கோவையில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேஷன் தலைவர் மனோகரன், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் எம் எல் எம் தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கியது போல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வழங்கிட வேண்டும் என்றார்.



ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் 14 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளதாகவும், மக்களை ஏமாற்றும் எம்எல்எம் கம்பெனிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்திவருவதாகவும் தெரிவித்தார். சில எம்எல்எம் நிறுவனங்கள் முறையாக மத்திய, மாநில அரசுகளிடம் முறையாக அங்கீகாரம் பெற்று டிடிஎஸ், ஜிஎஸ்டி போன்ற முறையாக செலுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைபுகளை உருவாக்கி தந்து வருகின்றது. இதனால் இந்தியா முழுவதும் படித்த பட்டதாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு நேரம் வேலை வாய்ப்பாக 5 கோடி பேரையும் பகுதி நேர வேலை வாய்ப்பாக சுமார் 12 கோடி பேரும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது.

ஆகவே எம்எல்எம் இண்டஸ்ட்ரியைக்கு தனி சட்டம்,தனி அமைச்சகம்,நல வாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றார்

கடன் உதவி,சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டி மத்திய, மாநில அரசு பலமுறை கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.ஆனால் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் MLM தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் முறையான அனுமதி பெறாமல் போலியான இணையதளங்களை வைத்து பல மடங்கு வட்டி தருவதாக அப்பாவி மக்களை ஏமாற்றி வருதாக தெரிவித்தார்.

MLM என்ற பெயரில் தொடங்கப்பட்ட போலி இணையதளங்கள் செயலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலி இணையதளங்கள் முடக்க கோரி மத்திய மாநில அரசையும்,காவல் துறையும் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட முகவர்,மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசாரங்கள் கொடுத்து உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தி,சட்ட ஆலோசனை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டப்பூர்வமாக உதவிகள் மற்றும் ஆலோசனை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...