கோவையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் 6 கோடியை திரும்ப பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு

நிதி நிறுவனம், ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், டெபாசிட் தொகையை திரும்ப பெற்று செல்ல, புகார்தாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: பணத்தை பெறாத டெபாசிட்தாரர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உறுதி கடிதம் பெற்று, உரிய ஆவணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

கோவை, காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த சீனிவாசப்பெருமாள் பைனான்ஸ் நிறுவனம், 654 பேரிடம் ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு நிலுவையில் இருந்த போது, மோசடி செய்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, மோசடி பணம் ஆறு கோடி ரூபாயை, நிதி நிறுவன உரிமையாளர்கள் கோர்ட்டில் திரும்ப செலுத்தினர். அந்த தொகையினை பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்கள், உரிய ஆவணங்கள் செலுத்தி, பணத்தை பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், 48 பேர் மட்டும் பணத்தை பெற்று சென்றனர். இதுவரை பணத்தை பெறாத டெபாசிட்தாரர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உறுதி கடிதம் பெற்று, உரிய ஆவணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

ஆவணங்களை வழங்கும் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...