கோவில் நுழைவாயில் போல அலங்காரம் செய்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

கோவை தேர் நிலை திடல் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் கோவில் நுழைவாயில் அலங்கார பந்தல் அமைத்து சிலைக்கு அருகே யானை முகம் போன்ற தூண்களுடன் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் அமைத்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.



கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தேர் நிலை திடல் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் முகப்பு அமைக்கப்பட்டு, ராஜ கணபதி அலங்காரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.



மேலும் விநாயகர் சிலைக்கு இரு புறங்களிலும் யானை முகம் கொண்ட தூண்கள் போல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.



வழக்கமாக தகரத்தினால் ஆன பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்து மக்கள் கட்சியினர் கோவில் போன்றே நுழைவாயிலை அமைத்து அதற்குள் விநாயகர் சிலையை வைத்து இரு புறங்களிலும் யானை முகங்கள் கொண்ட தூண்களை அமைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருவது அவ்வழியாக செல்லும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...