கோவில் நுழைவாயில் போல அலங்காரம் செய்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

கோவை தேர் நிலை திடல் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் கோவில் நுழைவாயில் அலங்கார பந்தல் அமைத்து சிலைக்கு அருகே யானை முகம் போன்ற தூண்களுடன் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் அமைத்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.



கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தேர் நிலை திடல் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் முகப்பு அமைக்கப்பட்டு, ராஜ கணபதி அலங்காரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.



மேலும் விநாயகர் சிலைக்கு இரு புறங்களிலும் யானை முகம் கொண்ட தூண்கள் போல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.



வழக்கமாக தகரத்தினால் ஆன பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்து மக்கள் கட்சியினர் கோவில் போன்றே நுழைவாயிலை அமைத்து அதற்குள் விநாயகர் சிலையை வைத்து இரு புறங்களிலும் யானை முகங்கள் கொண்ட தூண்களை அமைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருவது அவ்வழியாக செல்லும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...