தேர்தலுக்கு தயாராகும் அதிமுக நிர்வாகிகள் - பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் அதிமுக சார்பில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற பத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டர்.



2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஒன்றிய கழக அவைத் தலைவர் இடுவாய் சென்னியப்பன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மங்கலம் முருகசாமி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வைஸ் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கல்பனா வேலுச்சாமி மற்றும் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் பூத் வாரியாக இளைஞர் அணி மற்றும் இளம் பெண்கள் அணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பது குறித்து முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர் கையேடு வழங்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...