தேர்தலுக்கு தயாராகும் அதிமுக நிர்வாகிகள் - பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் அதிமுக சார்பில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற பத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டர்.



2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஒன்றிய கழக அவைத் தலைவர் இடுவாய் சென்னியப்பன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மங்கலம் முருகசாமி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வைஸ் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கல்பனா வேலுச்சாமி மற்றும் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் பூத் வாரியாக இளைஞர் அணி மற்றும் இளம் பெண்கள் அணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பது குறித்து முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர் கையேடு வழங்கப்பட்டது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...