பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்!

உதவி சமையலர்களுக்கு மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட உதவி கணக்கு சத்துணவு அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள உதவியாளர் சமையலர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிதி நிலைகளை உடனடியாக வழங்க வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட பொருளாளர் சுதா மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர் சுசிலா ஆகிய இருவரையும் உடனடியாக அதே இடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

ஆனைமலை ஒன்றியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு விடுப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சத்துணவு மையத்தை ஆய்வு செய்யும் பொழுது உதவி கணக்கு அலுவலர் லட்சக் கணக்கான ரூபாயை அபராத தொகையாக விதிக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

மேலும் விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...