பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்!

உதவி சமையலர்களுக்கு மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட உதவி கணக்கு சத்துணவு அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள உதவியாளர் சமையலர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிதி நிலைகளை உடனடியாக வழங்க வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட பொருளாளர் சுதா மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர் சுசிலா ஆகிய இருவரையும் உடனடியாக அதே இடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

ஆனைமலை ஒன்றியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு விடுப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சத்துணவு மையத்தை ஆய்வு செய்யும் பொழுது உதவி கணக்கு அலுவலர் லட்சக் கணக்கான ரூபாயை அபராத தொகையாக விதிக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

மேலும் விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...