17 ஆண்டுகளாக மின் இணைப்பில்லா கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்குக - பாமக வலியுறுத்தல்!

திருப்பூரில் 17 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாத சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த சின்னியம்பாளையம்புதூர் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க கோரி பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் பூமலூர் கிராமத்திற்கு உட்பட்ட சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாததன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மிகப்பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வீட்டு வரி உள்ளிட்டவை முறையாக செலுத்தி வந்தும் கூட, இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டபோது வட்டாட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.



எனவே அப்பகுதி பொது மக்களுக்கு எந்தவொரு நிபந்தனையும் இன்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக ஈடுபடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...