17 ஆண்டுகளாக மின் இணைப்பில்லா கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்குக - பாமக வலியுறுத்தல்!

திருப்பூரில் 17 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாத சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த சின்னியம்பாளையம்புதூர் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க கோரி பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் பூமலூர் கிராமத்திற்கு உட்பட்ட சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாததன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மிகப்பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வீட்டு வரி உள்ளிட்டவை முறையாக செலுத்தி வந்தும் கூட, இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டபோது வட்டாட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.



எனவே அப்பகுதி பொது மக்களுக்கு எந்தவொரு நிபந்தனையும் இன்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக ஈடுபடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...