17 ஆண்டுகளாக மின் இணைப்பில்லா கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்குக - பாமக வலியுறுத்தல்!

திருப்பூரில் 17 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாத சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த சின்னியம்பாளையம்புதூர் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க கோரி பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் பூமலூர் கிராமத்திற்கு உட்பட்ட சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாததன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மிகப்பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வீட்டு வரி உள்ளிட்டவை முறையாக செலுத்தி வந்தும் கூட, இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டபோது வட்டாட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.



எனவே அப்பகுதி பொது மக்களுக்கு எந்தவொரு நிபந்தனையும் இன்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக ஈடுபடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...