வனத்தியாகிகள் தினம்..!! கோவையில் பணியின் போது உயிரிழந்த வனத்துறை ஊழியர்களுக்கு அதிகாரிகள் மலர் அஞ்சலி.!

வனத்தியாகிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வனப்பணியின் போது உயிரிழந்த பாலன், ரவிராஜன் ஆகிய இரண்டு பேருக்கும் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் வனத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை வன பாதுகாப்பு இயக்குநர் சேவாசங், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேசன், வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வனத்துறையில் பணியாற்றி பணியின் போது வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்.11 தேசிய வனத்தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வனத்தியாகிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வனப்பணியின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்த ஆண்டு யானை தாக்கி உயிரிந்த பாலன், காட்டு மாடு தாக்கி உயிரிழந்த ரவிராஜன் ஆகிய இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் வனத்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.



கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதன்மை வன பாதுகாப்பு இயக்குநர் சேவாசங், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேசன், வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிந்த ஊழியர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...