வனத்தியாகிகள் தினம்..!! கோவையில் பணியின் போது உயிரிழந்த வனத்துறை ஊழியர்களுக்கு அதிகாரிகள் மலர் அஞ்சலி.!

வனத்தியாகிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வனப்பணியின் போது உயிரிழந்த பாலன், ரவிராஜன் ஆகிய இரண்டு பேருக்கும் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் வனத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை வன பாதுகாப்பு இயக்குநர் சேவாசங், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேசன், வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வனத்துறையில் பணியாற்றி பணியின் போது வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்.11 தேசிய வனத்தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வனத்தியாகிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வனப்பணியின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்த ஆண்டு யானை தாக்கி உயிரிந்த பாலன், காட்டு மாடு தாக்கி உயிரிழந்த ரவிராஜன் ஆகிய இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் வனத்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.



கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதன்மை வன பாதுகாப்பு இயக்குநர் சேவாசங், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், முதன்மை வன பாதுகாவலர் வெங்கடேசன், வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் கோவை மாவட்டத்தில் பணியின் போது உயிரிந்த ஊழியர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...